மாநாடு நாயகன் சிம்பு அண்மையில் திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார்.
அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் நேற்று இரவு தீபம் ஏற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் திருமணம் சரியான காலத்தில் நடக்காமல் அவதிப்படுவதும், திருமணம் நடந்தும் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஜோதிடத்தின் படி நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், 1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் 2, 8ம் இடங்களில் ராகு - கேது பார்வை ஏற்பட்டிருந்தாலும் இந்த தோஷம் ஏற்படக் கூடுமாம்.
இதற்கான பரிகாரத்தில் ஒன்றுதான் படகு தீபம். கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும். லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவும் பரிகாரமாக செய்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்