free website hit counter

ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் மழை காலநிலை காரணமாக, ஐரோப்பிய நாடுகள் பலவும் பலத்த சேதங்களைச் சந்திவரும் நிலையில், மேற்கு ஜேர்மனியில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 93 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்து முழுவதும் நிலவும் கடுமையான மழைவீழ்ச்சி காரணமாக ஏரிகள் மற்றும் ஆறுகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சுவிஸ் சுற்றுச்சூழலுக்கான மத்திய கூட்டாட்சி அலுவலகம் எச்சரித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், இத்தாலியின் நான்கு பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில், டெல்டா பிறழ்வு வேகமாக பரவி கோடையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவிஸில் தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை டெல்டா பிறழ்வு கொண்டுள்ளது.

இத்தாலியில், டெல்டா மாறுபாட்டின் பரவல் காரணமாக தொற்று விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) ஆகியவற்றின் வாராந்திர கொரோனா வைரஸ் கண்காணிப்பு அறிக்கையின் வரைவு தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒருவருக்கொருவர் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை இன்று முதல் அங்கீகரிக்கின்றன. இதற்கான உடன்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction