free website hit counter

இந்தியாவுக்கு அருகேயுள்ள சிறிய நாடான பூட்டானின் எல்லை அருகே தனது கட்டுமானப் பணிகளை சீனா தீவிரப் படுத்தியிருப்பதன் மூலம் கிழக்காசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை சற்று அதிகரித்திருப்பதாகக் கருதப் படுகின்றது.

சமீபத்தில் உலகை அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைப் பரிசோதனைகளை நிகழ்த்தியிருந்தது.

ஆப்கானில் தலிபான்களது கொடுங்கோல் ஆட்சி தொடர்பாக வெளிப்படையாக சமூக வலைத் தளங்களில் விமரிசித்த ஆப்கான் பல்கலைக் கழகத்தின் முக்கிய பேராசிரியர் ஒருவரைக் காபூலில் தலிபான்கள் கைது செய்திருப்பதாக தலிபான்களின் அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவினால் கிட்டத்தட்ட 22 பேர் பலியானது அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில், துப்பாக்கிதாரிகள் 3 சீனக் குடிமக்களைக் கடத்திச் சென்றிருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை சடுதியாக உயர்ந்ததைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம் கடும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.

சமீபத்தில் புத்தாண்டு தினத்தன்று தனது நாட்டு மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உரையாற்றிய போது, தற்போது நிலவும் பொருளாதார சூழலில், பொது மக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணுவாயுதங்கள் அல்ல' என்று தொனிப்பட உரையாற்றி இருந்தார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction