free website hit counter

சனிக்கிழமைக்குப் பின் சமந்தா ஒப்புக்கொண்ட தமிழ் படம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சனிக்கிழமை தொடங்கி ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன்பின், சமந்தா சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பார் என்று திரையுலகில் கூறப்பட்டது. ஆனால், அப்படி இல்லாமல், சாந்த ரூபன் எனும் அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கதாநாயகியை மையமாகக்கொண்ட கதை என்பதாலும் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள சாந்த ரூபன் கதை சொன்ன விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் உடனே நடிக்க ஒப்புதல் சொல்லிவிட்டாராம். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த போதும் அவற்றை மறுத்த சமந்தா, ஒரு புதிய இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction