free website hit counter

முடிவுக்கு வந்தது அட்லீ - ஷாரூக் கான் பஞ்சாயத்து !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘பிகில்’ படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் நடிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வந்தார் அட்லீ. ஷாரூக் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் மேலும் மற்றொரு நாயகியாக சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்தப் படத்தில், ஷாரூக் கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

மன்மத லீலை - வெங்கட் பிரபுவின் ஏமாற்று வேலை !

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் புனேவின் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்து கொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாரூக் கான் மகன் ஆர்யன் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷாரூக் கான் இந்தப் படத்தை கைவிடுவதாகச் சொல்லவே.. தொடக்கப் பணிகளுக்காகவும் முதல் கட்ட படப்பிடிப்புக்காகவும் மட்டும் 21 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் படத்தை நிறுத்த வேண்டாம் எனவும் ஷாரூக் கானின் மேலாளர் பூஜா தேதானி பஞ்சாயத்து பேசி வந்துள்ளார்.

ஆனால், செண்டிமெண்டாக ‘என் குடும்பத்துக்கு கெட்டது நடக்கிறது’ என்று கூறிவிட்டு அட்லீ படத்தில் நடிக்காமல் ஷாரூக் கான், ‘பதான்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்புக்கு போய்விட்டார். இதற்கிடையில் மிகவும் மனமுடைந்து தனகு ட்வீட்டர் பக்கத்தில் ஷாரூக் கானை கலைத்துவிட்டவர்களை சபித்து பதிவிட்டிருந்தார் அட்லீ. இதன்பின்னர் மீண்டும் ஷாரூக் கானுடன் பஞ்சாயத்து பேசப்பட்டதில் தற்போது அட்லீ படத்தில் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் மும்பையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார் என அட்லீ தரப்பில் கூறியுள்ளனர்.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction