free website hit counter

உக்ரைன் மோதலின் பதினைந்தாவது நாளில், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் மற்றும் உக்ரேனிய டிமிட்ரோ குலேபா ஆகியோருக்கிடையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும் எதிர்பார்ப்பு மிக்கதுமான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெற்றது.

உக்ரைன் ரஷ்ய யுத்தம் பதின்நான்காம் நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று செவ்வாய் கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வ்லோடிமிர் ஜெலென்ஸ்கி, சரணடையும் விருப்பமில்லை. ஆனால் டான்பாஸ் மற்றும் கிரிமியாவின் எதிர்கால நிலை மற்றும் நேட்டோவில் தனது நாட்டின் உறுப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை மேற் கொள்ளலாம் என தொலைக்காட்சி உரையொன்றில் முதற்தடவையாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் இன்று. போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், பொது மக்களை வெளியேற்றும் இடைக்காலப் போர்நிறுத்தங்கள் மறுபுறம், பாரிய குண்டுவீச்சுக்கள் இன்னொரு புறமுமாக இந்த யுத்தம் நீடித்துச் செல்கிறது.

உக்ரைனில் போர் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான வழிமுறைகளும் திறக்கப்படுகின்றன. இதேவேளை இன்று உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.

உக்ரைனில் தொடரும் யுத்தம் காரணமாக கடந்த பத்து நாட்களில், 1.3 மில்லியன் உக்ரேனிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது அடுத்து வரும் சில நாட்களிலேயே 1.5 மில்லியனைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போருக்கு எதிராக இன்று வீதிகளுக்கு வந்து கூடினார்கள். இன்று காலை சூரிச் நகரத்தில் சுமார் 20,000 பேர் வரை பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவநடவடிக்கையும், உக்ரைனின் எதிர்ப்பும் என கடந்த மாதம் 24ந் திகிதி ஆரம்பமாகிய யுத்தம் இன்று பத்தாவது நாளாகவும் தொடர்கிறது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction