free website hit counter

ஒருவரை நினைவுகூறும் நிகழ்வில் அரசியலா? - முன்னாள் ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவை நினைவுகூறும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவரிடம் அரசியல் கேள்வியை கேட்ட பத்திரிகையாளரை  சந்திரிகா குமாரதுங்க கடுமையாக சாடியுள்ளார்.

மங்களசமரவீர கொரோனாவால் உயிரிழந்து மூன்று மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் நேற்று அவரது குடும்பத்தினர் மதஅனுஷ்டானங்களிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பொரளையில் உள்ள ஜயரட்ண பார்லரில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில்கலந்துகொண்டுவிட்டு சந்திரிகா குமாரதுங்க அங்கிருந்து வெளியேறியவேளை அங்கு காணப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம், உரங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறித்து கேள்வியொன்றை கேட்டார்.

இதனால் சீற்றமடைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க , ஒருவரை நினைவுகூறும் நிகழ்வில் அரசியல் கேள்வியை கேட்பதா குறித்த பத்திரிகையாளரை கடுமையாக சாடியுள்ளார்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction