free website hit counter

உலகப் போர் நிழலில் “சிவப்பு கோடுகள்”

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்ற அலை. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால பகைமை, அதனுடன் அமெரிக்கா இணையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் . இவை அனைத்தும் உலக அரசியலை கவலையுடன் கவனிக்க வைக்கின்றன. மத்திய கிழக்கு பதற்றம், 1962 நினைவுகள், மற்றும் உலக அரசியலின் ஆபத்தான சமநிலையைக் கொண்டுள்ளன.

“Red Line” (சிவப்பு கோடு) என்ற சொல் மீண்டும் சர்வதேச விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒரு கேள்வி மட்டுமே ஒலிக்கிறது. இது உலகப் போரின் தொடக்கமா? அல்லது வரம்புகளை வரையறுக்கும் அரசியல் உத்தியாக மாறுமா?

1962: உலகம் மூச்சை பிடித்த 13 நாட்கள்

1962-இல் நடந்த Cuban Missile Crisis உலகத்தை அணு போரின் விளிம்புக்கு கொண்டு சென்றது. கியூபாவில் ஏவுகணைகள் நிறுவப்பட்டதை அடுத்து, John F. Kennedy கடற்படை முற்றுகையை அறிவித்தார். மறுபுறம் சோவியத் ஒன்றியம் தனது பாதுகாப்பு உரிமையை வலியுறுத்தியது. அந்த நேரத்தில் இரு தரப்பும் தங்கள் “சிவப்பு கோடுகளை” தெளிவாக வரையறுத்தன. ஆனால் முக்கியமானது என்னவென்றால், அவை கடக்கப்படவில்லை.

வரலாறு பின்னாலில் அதனை “வெற்றி பெற்றது யாரும் இல்லை; தவிர்க்கப்பட்டது பேரழிவு.” எனப்பதிவு செய்தது.

இன்றைய மத்திய கிழக்கு: சிவப்பு கோடுகளின் அரசியல்

இன்றைய சூழலில், ஈரான் தனது பாதுகாப்பு வரம்புகளை வெளிப்படையாக அறிவித்து வருகிறது. பொதுவாக அவை பின்வருமாறு புரிந்துகொள்ளப்படுகின்றன. தனது நிலப்பரப்பில் நேரடி தாக்குதல், அணு வசதிகளின் மீது தாக்குதல், உயர்மட்ட அதிகாரிகள் மீது இலக்கு வைத்த நடவடிக்கைகள், பிராந்திய கூட்டாளிகளின் மீது தீவிர ராணுவ அழுத்தம், இவை நடந்தால் “கடுமையான பதிலடி” வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இஸ்ரேல் தனது பாதுகாப்பு கொள்கையில், “அச்சுறுத்தல் உருவாகும் முன்பே தடுக்க வேண்டும்” என்ற அணுகுமுறையை வலியுறுத்துகிறது.அமெரிக்கா தனது கூட்டாளி பாதுகாப்பை ஒரு மூலக்கொள்கையாகக் கொண்டுள்ளது. இதனால் மூன்று தரப்புகளின் “சிவப்பு கோடுகள்” ஒரே புவியியல் மேடையில் ஒட்டிக்கிடக்கின்றன.

ஒற்றுமைகள்: 1962-இன் எதிரொலி

1962-இல் ஒரு தவறான ரேடார் சிக்னல் கூட அணு தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம். இன்றும் ஒரு தவறான தாக்குதல் அல்லது தவறான விளக்கம் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக சக்திகள் பல நேரங்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் அந்த சொற்கள் செயலில் மாறுகிறதா என்பது வேறு கேள்வி. அணு ஆயுதங்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பின்னணியில் “அதிகபட்ச தடுப்பு” சக்தியாகவே இருக்கின்றன.

வேறுபாடுகள்: இரட்டை மோதலிலிருந்து பல அடுக்குகள்

Cuban Missile Crisis இரண்டு மிகப்பெரிய சக்திகளுக்கிடையேயான நேரடி மோதல். ஆனால் இன்றைய சூழல் பல அடுக்குகளைக் கொண்டது . பிராந்திய கூட்டணிகள், பிரதிநிதி ஆயுதக் குழுக்கள், பொருளாதார தடைகள், தகவல் போர்கள். இதனால் கட்டுப்பாடு இன்னும் சிக்கலாகிறது. ஒரு நாடு தாக்கவில்லை என்றாலும், அதன் கூட்டாளி நடவடிக்கை எடுக்கலாம். அதனால் “Red Line” யார் கடந்து விட்டார்கள் என்பதைத் தீர்மானிப்பதே சவாலாகிறது.

Red Line: போரைத் தொடங்குமா? தடுக்குமா?

சிவப்பு கோடு என்பது இரண்டு வகையில் செயல்படும். அச்சுறுத்தல் கருவியாக எதிர் தரப்பை பயமுறுத்தும். தடுப்பு கருவியாக வரம்பை தெளிவுபடுத்தி போரைத் தவிர்க்க உதவும். 1962-இல் அது தடுப்பு கருவியாக செயல்பட்டது. இன்றும் அதே முடிவு ஏற்படுமா என்பது தலைமைத் திறன், தகவல் தெளிவு, மற்றும் பின்னணிப் பேச்சுவார்த்தைகளின் மேல் சார்ந்துள்ளது.

உலக அரசியலில் “சிவப்பு கோடு” என்பது ஒரு கோடு மட்டுமல்ல  அது மனநிலையின் வரம்பு. அதை கடக்காமல் நிறுத்துவது தான் அரசியல் ஞானம். மத்திய கிழக்கின் இன்றைய பதற்றம் 1962 போல, உலகத்தை அச்சுறுத்தலாம். ஆனால் அதே வரலாறு நமக்கு நினைவூட்டுவது , “போர் என்பது திடீர் வெடிப்பு அல்ல; கட்டுப்பாட்டை இழந்த கணிப்புகளின் தொடர்ச்சி.” அந்த தொடர்ச்சியை நிறுத்துவது அரசியல் துணிச்சலா? அல்லது தேசிய பெருமை என்ற பெயரில் அதை முன்னெடுப்பதா?

உலகம் மீண்டும் ஒரு தேர்வின் முன் நிற்கிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula