In The Spotlight
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக முன்னர் உறுதியளித்திருந்த போதிலும், அரசாங்கம் ஏன் மின்சாரக் கட்டண உயர்வை அனுமதிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் 15 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
அன்மைக்காலத்தில் இந்திய அளவில் கவனம் பெற்றிருப்பவர் சொல்லிசைப் பாடகர் வேடன். இவர் வரும் 14ந் திகதி திருச்சியில் நடைபெறும் 'மதச் சார்பின்மை காப்போம்' மகாநாட்டில் கலந்து கொள்வார் என்றும், அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையலாம் எனவும் ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
அகமபாத் விமான நிலையத்திலிருந்து, லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட போயிங் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், விமான நிலையத்திற்கு அருகிலிருந்த மருத்துவ வளாகப் பகுதியில் விழுந்து வெடித்ததில், விமானத்தில் பயனம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியாவின் மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து 220 பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேருடன் இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடந்த வாரம் அவர் வெளியிட்ட சில பதிவுகள் "மிக அதிகமாக வரம்புக்கு மேல்" சென்றுவிட்டதால், அவை குறித்து வருத்தம் தெரிவிப்பதாக கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க் புதன்கிழமை தெரிவித்தார்.
டெஸ்லா (TSLA.O) புதிய தாவலைத் திறக்கிறது மற்றும் ஜனாதிபதியின் அதிக வரி மற்றும் செலவு மசோதாவை "அருவருப்பானது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விவரித்ததால், சமூக ஊடகங்களில் அவமானங்களை பரிமாறிக் கொண்ட பிறகு, மஸ்க்குடனான தனது உறவு முடிவுக்கு வந்ததாக டிரம்ப் சனிக்கிழமை கூறினார்.
ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு சமிக்ஞை ஆதரவு உட்பட, டிரம்பை விமர்சிக்கும் சில பதிவுகளை மஸ்க் நீக்கியுள்ளார், மேலும் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவரது கோபம் குறையத் தொடங்கியுள்ளதாகவும், அவர் உறவை சரிசெய்ய விரும்பக்கூடும் என்றும் கூறுகின்றன.
"கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பற்றிய எனது சில பதிவுகள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவை வரம்புக்கு மேல் சென்றன," என்று மஸ்க் புதன்கிழமை தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் எழுதினார், அவர் எந்த குறிப்பிட்ட இடுகைகளைப் பற்றிப் பேசுகிறார் என்பதைக் குறிப்பிடாமல்.
மஸ்க்கின் இடுகைக்குப் பிறகு பிராங்பேர்ட்டில் டெஸ்லா பங்குகள் 2.7% உயர்ந்தன.
ட்ரம்பின் 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் பெரும்பகுதியை மஸ்க் நிதியுதவி செய்தார், கடந்த ஆண்டு அமெரிக்கத் தேர்தல்களில் கிட்டத்தட்ட $300 மில்லியன் செலவிட்டார், மேலும் குடியரசுக் கட்சியினர் ஹவுஸில் பெரும்பான்மை இடங்களைத் தக்கவைத்து செனட்டில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றதற்கான பெருமையையும் பெற்றார்.
பின்னர் டிரம்ப் கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதற்கும் செலவினங்களைக் குறைப்பதற்கும் ஒரு முயற்சிக்குத் தலைமை தாங்க அவரை நியமித்தார்.
டிரம்பின் மார்க்யூ வரி மசோதாவை விமர்சித்த பின்னர், அது மிகவும் விலை உயர்ந்தது என்றும் அரசாங்க செயல்திறன் துறையில் அவரது பணியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை என்றும் கூறி, கடந்த மாத இறுதியில் மஸ்க் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக முன்னர் உறுதியளித்திருந்த போதிலும், அரசாங்கம் ஏன் மின்சாரக் கட்டண உயர்வை அனுமதிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் 15 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
Top Stories
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது முதல் படம் 'சகாப்தம்'. பின்னர் 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது 'படைத்தலைவன்' படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
நீண்ட நாட்களின் பின் ஒரு தமிழ்திரைப்படத்தின் பல பாடல்கள் நன்றாக அமைந்து, ஒரு நல்ல இசை தொகுப்பாக வந்திருப்பது 'தக் லைப்' படத்தின் பாடல்கள்.
கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்ற கமல்ஹாசனின் கூற்றுக்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்தப் படத்தை வெளியிடத் தடை விதித்தது.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துப் பெற்றுத் தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலையில், மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில், பெற்றோர்களாக இணைந்து கலந்து கொண்டார்கள்.
பார்வைகள்
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
நல்லூர் கந்தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ ?, வட இலங்கை மக்களை வசப்படுத்த, வழிபடுகின்றோமோ இல்லையோ,நல்லூர்க் கோவிலுக்கு ஒரு முறையேனும் போய்விட வேண்டும் என்பதில் தென் இலங்கை அரசியற் தலைவர்கள் யாவரும் அக்கறையாக இருந்தார்கள்.
கஞ்சி தானிய அரிசி வகைகளில் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதனாலும், சீக்கிரமாக செரிமானம் பெற்றுவிடக் கூடியதும் என்பதனாலேயே பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
சென்ற வாரத்தில் ஆசிய பூகோளப் பரப்பில், பரபரப்பாக இருந்த இந்தியா பாகிஸ்த்தான் போர் முறுகல், கடந்த இரு தினங்களில் அமைதி கண்டிருக்கிறது. இது நிரந்தரமான அமைதியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றே ஊகிக்கத் தோன்றுகின்றது.
நாடு தராவிட்டாலும் பறவாயில்லை, ஐந்து ஊர்கள் தந்தால் போதும் எனும் நிலையில் நின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு, தமிழ் மக்கள் பயங்காட்டிய வண்ணமே மறுபடியும் ஊர்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றார்கள்.
வாசகசாலை
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
ஜூன் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
தொடுதிரை தொலைபேசிகள்(smartphone) வருகை என்பது மக்கள் சமூகத்தின் வாழ்வியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. நன்மை, தீமை, எனப் பல்வகைத் தாக்கங்கள் இருந்த போதும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொடுதிரை தொலைபேசிப் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து உள்ளது.
பல தசாப்பதங்களாக கடல் மட்டத்தை உயர்த்தும் பணியில் பங்குபெற்றிவந்த அண்டார்டிகாவின் பாரிய பனிப்படலம்;
இன்று வைகாசி மூலம் (12-6-2025) வியாழக்கிழமை. ஸ்ரீ ஞானசம்பந்தர்குருபூஜை. நமது கல்வெட்டுகளில் சம்பந்தபெருமான் ஆணைநமதென்றபிரான் என்று அழகாக குறிக்கப்படுகின்றார். சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை அருளியவர் ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?