In The Spotlight
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறை நிராகரித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் என்று இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
More News
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;-
“*நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
* திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
* மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு த.வெ.க. அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.
* குலசேகரப்பட்டினம் விண்வெளி உற்பத்தி மையத்தை, தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்.
* காலநிலை தாங்குதன்மை பெருந்திட்டத்தை தொடங்க வேண்டும்.
* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்மொழிகிறது.
* சென்னை-குமரி அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.
* செங்கல்பட்டு-திருச்சி ஜி.எஸ்.டி. சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
* திருச்சி-கரூர், கரூர்-கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.
* ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக்குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி நிதியை வழங்க வேண்டும்.
* இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் மீன்படி உரிமையை பாதுகாத்து, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கான 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
* கல்வி நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது.
* இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த விழைகிறோம்.
* பெண்களின் பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவை.
* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை முன்மொழிகிறோம்.”
இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
"இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையாகத் தாக்குதல் நடத்தப்படும் என்றும், விரைவில் அந்த மத்திய கிழக்கு நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்றும்" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
"வெனிசுலா விஷயத்தில் நாம் செய்ததைப் போலவே, வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில், கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றி, அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் ஏற்போம்," என்று டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' நிகழ்ச்சியில் கூறினார்.
தொடர்ந்து மூன்றாவது இரவாக, "பெரிய, சக்திவாய்ந்த" தாக்குதல்கள் நடத்தப்படும் என டிரம்ப் அச்சுறுத்தினார். இதன் மூலம், பெயரளவிலான போர் நிறுத்தத்தை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுமாறு தெஹ்ரானை அவர் வற்புறுத்தி வருகிறார்.
கார்க் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தொழிலின் மையமாகவும், அந்நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகவும் விளங்குகிறது. இது ஈரானின் வளைகுடாக் கடற்கரையில், குறுகியதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் வடமேற்கில் அமைந்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் போரின் ஆரம்பத்தில், இந்தத் தீவைக் கைப்பற்றுவது குறித்து டிரம்ப் பேசியிருந்தார்.
அமெரிக்கா ஜனவரியில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து நீக்கியதுடன், தற்போது அதன் எண்ணெய்த் தொழில் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறது. இதே உத்தியை ஈரானுடனும் மீண்டும் செயல்படுத்த விரும்புவதாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
ஈரானின் எண்ணெய் முனையங்களை அமெரிக்கா எவ்வாறு கைப்பற்றும் என்பது குறித்த எந்த விவரங்களையும் டிரம்ப் அளிக்கவில்லை, ஆனால் அத்தகைய எந்தவொரு நடவடிக்கைக்கும் அமெரிக்கத் தரைப்படைகளின் ஈடுபாடு கிட்டத்தட்ட நிச்சயமாகத் தேவைப்படும்.
‘பைத்தியக்காரத்தனம்’
ஆனால், தனது சமூக ஊடகப் பதிவிற்குச் சற்றுப் பின்னர் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், இந்த நடவடிக்கையைத் தொடர்வதா வேண்டாமா என்பதில் அமெரிக்கத் தலைவரே குழப்பத்தில் இருப்பது போல் தோன்றினார்.
"பாருங்கள், கார்க் தீவைக் கைப்பற்றுவதுதான் எப்போதுமே எனது விருப்பமாக இருந்துள்ளது," என்று ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். மேலும், "உண்மையைச் சொல்லப்போனால், அதைச் செய்வதற்கு அமெரிக்காவுக்குத் துணிச்சல் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை," என்றும் அவர் கூறினார்.
"நான் தரைப்படைகளை அனுப்ப விரும்பவில்லை" என்று டிரம்ப் வலியுறுத்தினாலும், "நான் விரும்பினால், ஒரு சிறிய படை வீரர்களை அனுப்பி அந்த முழு இடத்தையும் கைப்பற்ற முடியும்" என்றும் கூறினார்.
முன்னர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியிருந்த நிலையில், ஈரானின் குடிமக்கள் உள்கட்டமைப்பைத் தாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
"நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் அப்படிச் செய்தால், மக்கள் துன்பப்படுவார்கள்," என்று டிரம்ப் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும், அணு ஆயுதத்தை உருவாக்காமல் இருக்கவும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறிய ஈரான் மீது தனக்கு அதிகரித்து வரும் விரக்தியையும் டிரம்ப் வெளிப்படுத்தினார்.
"இந்த விஷயம் முழுவதும் பைத்தியக்காரத்தனமானது, அவர்கள் உண்மையில் அடிபணிந்துதான் இருக்கிறார்கள், அது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை," என்று டிரம்ப் கூறினார்.
"நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்."
இதற்கிடையில், வளைகுடா நட்பு நாடுகளுக்கு ஈரான் ஏற்படுத்தும் சேதங்களுக்கு ஈரானிய நிதியைப் பயன்படுத்துவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வியாழக்கிழமை உறுதியளித்தார்.
சமீபத்திய நாட்களில், போர் நிறுத்தம் மேலும் மேலும் தள்ளாடுவதால், ஈரானும் அமெரிக்காவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
"வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு அது ஏற்படுத்தும் எந்தவொரு சேதமும், ஈரானியக் கணக்குகளிலிருந்து எடுக்கப்படும் நிதியைக் கொண்டு ஈடுசெய்யப்படும்," என்று பெசென்ட் X தளத்தில் எழுதினார்.
"பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்திற்குச் செலுத்தப்படும் எந்தவொரு சுங்கக் கட்டணமும், அவர்களின் கணக்குகளிலிருந்து எடுக்கப்படும் நிதியைக் கொண்டு ஈடுசெய்யப்படும்" என்றும் பெசென்ட் மேலும் கூறினார்.
போரின் ஆரம்பத்திலிருந்தே தெஹ்ரான் கிட்டத்தட்ட மூடிவிட்ட, எரிசக்திப் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான கட்டணங்களை வசூலிப்பதற்காக ஈரான் அமைத்துள்ள புதிய முகமையே இந்த ஆணையம் ஆகும்.
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறை நிராகரித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் என்று இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில் அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் கிளிம்ஸ் வெளியானது.
துரந்தர் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்வைகள்
இயற்கையைக் காப்பதே மனிதகுலத்தின் பாதுகாப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு நினைவு நாளாக மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு இயற்கையின் நலனோடு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும்.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
ஈழத் தமிழினத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக அறுத்துவிடும் கொடுங்கனவோடு பேரினவாதம் தன்னுடைய கறுப்புக் கரங்களை காலங்காலமாக நீட்டி வந்திருக்கின்றது.
"சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்..." எனும் நான் எனும் குரலைக் கேட்பதற்காக தமிழகத்தின் ஒரு கோடியே 75 இலட்சத்திற்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் பேரிலோ, தான் இரசித்த விஜய் எனும் ஒரு நடிகன் மீதான விருப்பத்தின் காரணமாகவோ, தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களித்த ஒவ்வொருவனும், கடந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும், ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும், அச்சத்துடனும் கடந்து சென்றான்.
மே 1 – உலகம் முழுவதும் “உழைப்பாளர் தினம்” எனக் கொண்டாடப்படும் இந்த நாள், ஒரு சாதாரண நினைவுநாள் அல்ல. இது மனித உழைப்பின் மதிப்பு, உரிமைகள், மற்றும் சமூக நீதி ஆகியவற்றிற்கான போராட்டங்களின் வரலாற்றை நினைவுகூரும் முக்கியமான தருணமாகும்.
வாசகசாலை
பாரதிராஜா என்றதும் முதலில் அவருடைய குரல்தான் என் மனதுள் ஒலிக்கும். ’என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய இந்த பாரதிராஜா’ என கரங்களை உயர்த்தும்போதே ஒரு கலைஞன் மண்ணின் கதையோடு வந்திருக்கிறான்,
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
கடந்த ஒரு மாதகாலமாக தமிழக அரசியல் களத்தில் நடைபெற்று வரும் காட்சிகளை, கதையளப்புக்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகையில் பல வேடிக்கை மனித முகங்களையே காணமுடிந்தது. இந்த மனிதர்கள் பேசுகின்ற அரசியல், ஆளாளுக்கு மாறி மாறி வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள், முதலமைச்சர் மீடியாவைச் சந்திப்பதில்லை கோபக் குரல்கள் என நிறைந்திருக்கின்றது.
அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் எனப் பாடிய தேனிசையின் நினைவும், குரலும், பனைமரங்கள் வாழும்வரை, அதை நாம் காணும் வரை, நம் நினைவில் வருவார் தேனிசை செல்லப்பா.
அமெரிக்கா - ஈரான் அறிவித்திருக்கும் இரு வாரகால "போர்நிறுத்தம்" இடைநிறுத்தமா, நீண்டகால அமைதியா? என்பது பல தரப்பிலும் எழும் கேள்வியாகும். அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதலின் அடுத்த 6 மாதங்கள் எவ்வாறு அமையலாம் எனும் சுருக்கமான பார்வை இது.
ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.
பன்னிரு இராசிகளுக்குமான வார (ஜுன் 8 முதல் ஜுன் 14 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,
