சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்த ஒரு தமிழ் இளைஞன், மன உளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டான் எனச் செய்திகளில் படிக்க முடிந்தது. ஒருவேளை அவன் ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்களைப் படித்திருந்தால், இவ்வாறான ஒரு மனநிலைக்குச் சென்றிருக்க மாட்டானோ என எண்ணத் தோன்றிது.