ஒரு மொழியின் இலக்கியச் செழுமையை அளவிடுவது அதன் படைப்புகளின் எண்ணிக்கையால் மட்டுமல்ல; அந்த மொழி எத்தனை உலகங்களைத் தனக்குள் வரவேற்றிருக்கிறது என்பதாலும் ஆகும். அதேவேளை, ஒரு கவிஞனின் பெருமை அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையில் மட்டும் தங்கியிருப்பதில்லை; அவர் வாழ்ந்த காலத்தின் உணர்வுகளை எவ்வளவு ஆழமாக உள்வாங்கினார், அவற்றை எவ்வளவு நேர்மையாக மொழியில் வடித்தார், பிற மொழிகளின் அனுபவங்களைத் தமது மொழிக்குள் எவ்வளவு நுட்பமாகக் கொண்டு வந்தார் என்பதிலேயே அவரது இலக்கியப் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. இந்த இரண்டு பரிமாணங்களையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஈழத்துத் தமிழிலக்கியத்தின் மூத்த ஆளுமைகளில் ஒருவர்தான் கவிஞர் சோ. ப எனும் ஆசிரியர் சோ.பத்மநாதன்.