சமூகத் தொடர்பாடல்களில் ஒரு முக்கிய பங்கினை வகித்த 'ஸ்கைப்' தளம், மே 5 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றிருக்கிறது. தொலைத் தொடர்பாடலில் ஒரு சகாப்தத்தின் முடிவு இது என வர்ணிக்கப்படுகிறது. 2003ம் ஆண்டு ஸ்கைப் தொடங்கப்பட்டதிலிருந்து, நேற்று (மே 5ந் திகதி ) வரை, அது உலகின் பலகோடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.