free website hit counter

சுவிற்சர்லாந்து திங்கள் முதல் கோவிட் -19 பாஸ்களை வழங்கவுள்ளது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் மாநிலங்களில், ஜூன் 7 திங்கள் முதல் முதல் கோவிட் சுகாதார சான்றிதழ்கள் வழங்கத் பணி தொடங்கும் என்று மத்திய கூட்டாட்சி அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

முழு (2டோஸ்) தடுப்பூசி போடப்பட்டவர்கள் , கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்கள், மற்றும் சமீபத்தில் எதிர்மறையாக சோதிக்கப்பட்ட நபர்களுக்கு கோவிட் ஹெல்த் பாஸ் வழங்கப்படும்.

2021 ஜூன் மாத இறுதியில் சுவிற்சர்லாந்து முழுவதும் இது பயன்படுத்த தயாராகும்" என்று அரசாங்கம் அறிவித்ததுள்ள இச் சான்றிதழ்கள் காகிதத்தில் அல்லது மின்னணு வடிவத்தில் கிடைக்கும் (அதாவது QR குறியீடு மூலம்).

இந்த இரண்டு வகைகளிலும், அவர்களுடன் ஒரு உத்தியோகபூர்வ அரசாங்க மின்னணு கையொப்பமும் இருக்கும். அதே நேரத்தில் சான்றிதழை வழங்கும்போது வைத்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்தையும் பாஸ்போர்ட்டையும் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் அமைப்பு குறிப்பாக ஒரு சேமிப்பு பயன்பாடு (கோவிட் சான்றிதழ்) மற்றும் சரிபார்ப்பு விண்ணப்பம் (கோவிட் சான்றிதழ் சோதனை) ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றும், இதில் தனிப்பட்ட தரவுகள் மத்திய நிர்வாகத்தால் மையமாக சேமிக்கப்படவில்லை டஎனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழை கையொப்பமிட தேவையான தகவல்கள் சான்றிதழ் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டவுடன் கணினியிலிருந்து நீக்கப்படும். கூடுதலாக, அரசாங்கத்தின் தீர்வு திட்டமிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அமைப்புடன் ஒத்துப்போகிறது மற்றும் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க உதவுகிறது என்றும் தெரலிவிக்கப்பட்டுள்ளது.

இச் சான்றிதழ்கள் இலவசமாக இருக்கும், ஆனால் வைத்திருக்க வேண்டுமெனும் கட்டாயமில்லை. ஆயினும் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு பயணம் தொடர்பான சில சலுகைகள், கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்பன உடனடிச் சாத்தியமாகலாம். இது தவிர மற்றும் பிற சலுகைகள் இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction