இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்
தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக ராஜதந்திர தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியா LVM3-M6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
“திமுக ஒரு தீயசக்தி..” - ஈரோடு பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி திணிப்பு! - முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மெஸ்சி ரசிகர் சந்திப்பில் கலவரம்
அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வரும் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.