free website hit counter

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை  4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள்  அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: