free website hit counter

சுவிற்சர்லாந்தில் மறுபடியும் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் நேற்று மே 27 ந் திகதி, மாலை 6 மணி முதல் இங்கிலாந்து சேர்க்கப்பட்டுள்ளது.

சுவிஸ் சுகாதார அமைச்சின் வைரஸ் பிறழ்வுகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தும் சேர்க்கபட்டுள்ளதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது அதிகரித்து வரும் கோவிட் -19 இந்திய மாறுபாடு காரணமான தொற்று அதிகரிப்பினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இங்கிலாந்தில் இருந்து சுவிஸ் வரும் பயணிகள் எதிர்மறையான கொரோனா வைரஸ் பரிசோதனையை முன்வைக்க வேண்டும் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட இது அவசியமாகும். பிரேசில், கனடா, இந்தியா, நேபாளம் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வருபவர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும்.

மே 31 முதல், பிற நாடுகளிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அல்லது ஆறு மாதங்களுக்கு முன்னர் கோவிட்டிலிருந்து மீண்டவர்கள் சுவிற்சர்லாந்திற்குள் நுழையும்போது சோதனை அல்லது தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction