free website hit counter

ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - 6 ஆண்டு சாதனையை முறியடித்த லோக் அதாலத்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்டு கர்நாடக லோக் அதாலத் 6 ஆண்டு சாதனையை முறியடித்தது.
கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையம் சார்பில் கடந்த 25-ந் தேதி மாநிலம் முழுவதும் லோக் அதாலத் நடத்தப்பட்டன.

இதுகுறித்து கர்நாடக மாநில சட்ட சேவை ஆணைய தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான வீரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது, மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 77 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இது புதிய சாதனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 715 வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டது தான் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction