free website hit counter

மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சேவைப் பணியில் ஈடுபட வலியுறுத்தல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மோடி பிறந்த நாளையொட்டி 15 நாட்கள் சேவை, தூய்மை பணிகளில் ஈடுபட பா.ஜனதா எம்.பி.க்களுக்கு வலியுறுத்தல்
இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி பிறந்தநாள். 73 வயதை நிறைவு செய்து 74-வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் "15 நாட்கள் சேவை" என்பதன் மூலம் மக்களுக்கு சேவை செய்தல், தூய்மைப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடும்படி பா.ஜனதா கட்சி எம்.பி.களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகளிலும், தூய்மை பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர்கள் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

ரத்த தானம் முகாம், தூய்மை பணி பிரசாரம் ஆகியவற்றில் ஈடுபடுதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைவதற்கு தகுதியானர்வகள் இன்னும் அத்திட்டத்தில் இணையவில்லை என்றால், அதற்கான வேலையை செய்து அவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான கார்டுகளை வாங்கி கொடுத்தல் போன்ற பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த வருடமும் இதுபோன்ற பணிகளில் பா.ஜனதா எம்.பி.க்கள் ஈடுபட்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction