free website hit counter

டெல்லியில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
டெல்லியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது . இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியது. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்தது. 

இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது  டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் 4 சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு அபராதம் பொருந்தாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction