free website hit counter

உங்கள் இல்லம் தேடி வரும் கங்கை புனித நீர்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் ரூ.30 ரூபாய்க்கு கங்கை புனித நீர்

விற்பனை செய்யப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து கங்கை புனித நீரை எடுத்து அதை சுத்திகரிப்பு செய்து நாடு முழுவதும் கொண்டுச்சென்று சேர்க்கும் வேலையை இந்திய தபால் துறை செய்து வருகிறது. புது வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த கங்கா ஜல் எனப்படும் புனித நீரை பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

கங்கா ஜல் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 395 தபால் நிலையங்களில் இந்த புனித நீரானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் சென்னையில் மட்டும் 95 தபால் நிலையங்களில் அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து பிற நாட்களில் கங்கா ஜல் விற்பனை செய்யப்படுகிறது. 250 மில்லி லிட்டர் அதாவது கால் லிட்டர் அளவு கொண்ட இந்த பாட்டில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கங்கைக்கு நேரில் சென்று, புனித நீராட முடியாதவர்களுக்கு இந்த திட்டம் ஒரு மாற்றாக இருந்தாலும், பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் நீர் உண்மையில் கங்கை தீர்த்தம் தானா என்றும், அதை ஏன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பத்தான் செய்கின்றனர்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: