free website hit counter

ஜனவரி 5ஆம் திகதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2022ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5ஆம்

திகதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இம்முறை புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத் தொடர் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5ம் திகதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும், கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறிய அவர், இதற்காக பேரவையில் தொடுதிரை கணினிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction