free website hit counter

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஐதராபாத் - ஐ.எஸ்.எல்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கோவாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஐதராபாத் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை. 2வது பாதியில் கேரள வீரர் ராகுல் 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆ,ட்டம் சமனில் முடிந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction