free website hit counter

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5, 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது.
ஜூன் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடக்கிறது. ஜூன் 9 அன்று டெல்லியில் போட்டி தொடங்கும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .

இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .ரிஷாப் பண்ட் ,துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் .புதிதாக (அறிமுக வீரர்கள் ) உம்ரான் மாலிக் ,அர்ஷ்தீப் சிங் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்திய அணி :
கே.எல். ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷாப் பண்ட் , தினேஷ் கார்த்திக் , ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய் , புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction