free website hit counter

Sidebar

10
, மே
57 New Articles

2024 ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாக ரஷ்யர்களை அனுமதிக்குமாறு விளையாட்டு அமைப்புகள் IOCயிடம் கேட்கின்றன

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒலிம்பிக் விளையாட்டுக் கூட்டமைப்புகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம்(IOC) ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை அடுத்த கோடைகால பாரீஸ் விளையாட்டுப் போட்டிகளில் நடுநிலையாளர்களாகப் போட்டியிட அனுமதிக்குமாறு கேட்டுள்ளன.
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவும் பெலாரஸும் குற்றம் சுமத்தப்பட்டன. ஆனால் IOCயால் தடை செய்யப்படவில்லை.

மார்ச் மாதத்தில், விளையாட்டு வீரர்கள் தனிப்பட நடுநிலையாளர்களாக போட்டியிட கூட்டமைப்புகள் பரிந்துரைத்தன. ஆனால் பாரிஸ் அதை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.

சுவிட்சர்லாந்தின் லொசானில் நடந்த ஒலிம்பிக் உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட IOC அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

ஐஓசி தலைவர் தாமஸ் பாக் கடந்த வாரம் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய தலையீடு குறித்த இறுதி முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் IOC நிர்வாகக் குழு கூட்டத்தில் வரும் என்று குறிப்பிட்டார்.

IOC உச்சிமாநாட்டில் தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் அது நடுநிலையின் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இருக்கும், அதாவது அவர்களின் கொடிகள், தேசிய கீதங்கள் அல்லது வேறு எந்த தேசிய சின்னத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியது.

இது தனிப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது. அணிகள் அல்ல. மேலும் அத்தகைய விளையாட்டு வீரர்களுக்கு இடமளிக்கும் தகுதி முறைகள் அல்லது ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. உக்ரேனில் போரை தீவிரமாக ஆதரிக்கும் அல்லது இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது என்று IOC யின் நிர்வாக குழு முன்பு சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் நிகழ்வு அமைப்பாளர்களிடம் கூறியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula