free website hit counter

Sidebar

24
செ, ஜூன்
27 New Articles

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் துவங்கிய இப்போட்டியின் முதல் நாளே இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை மீராபாய் சானு பெற்றுக்கொடுத்தது வரவேற்பை பெற்றுவருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கமாக மாறியுள்ளதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மீராபாய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் பல பிரபலகங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இப்போட்டியில் தங்கப்பதக்கதை சீனாவின் ஹூ ஜிஹுய் வென்று ஒலிம்பிக் சாதனைப்படைத்துள்ளார். அதேவேளை வெண்கல பதக்கத்தை இந்தோனேசிய வீராங்கனை கான்டிகா ஐசா வென்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula