free website hit counter

மற்றுமொரு கட்டண உயர்வு - வெளியான விசேட வர்த்தமானி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மற்றுமொரு கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும்.

மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணம் 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10,000 ரூபாவில் இருந்து தற்போது 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியின் உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தாமதக் கட்டணம் 10,000 ரூபாவாகவும், உரிமம் காலாவதியான 31 தொடக்கம் 90 நாட்களில் 25,000 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 90 நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: