free website hit counter

இலங்​கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இறுதியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டிருந்தது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 15 ஆவது குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

எனினும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 1871 இல் நடத்தப்பட்டது, கடைசியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டது.

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction