free website hit counter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி பணி நீக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கடமை தவறிய பொலிஸ் அதிகாாி பணியிடை நீக்கம்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதலின் போது கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியதன் காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதால் அந்த அதிகாரியை பொலிஸ் மா அதிபர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

எனவே, 2023, ஜூன் 14, முதல் அவரை சேவையில் இருந்து இடைநீக்கம் செய்து பொலிஸ் தலைமையகம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction