free website hit counter

இன்று இரவு முதல் 30 ஆம் திகதி நாட்டை முடக்க தீர்மானம் : அத்தியாவசிய சேவைகள் தொடரும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாடளாவிய தனிமைபடுத்தல் ஊரடங்கை அமல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதிக்குள் வழமைபோல் அத்தியாவசிய சேவைகள், விவசாயம், மருந்தகங்கள். தொழிற்சாலைகள் ஆகியவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction