free website hit counter

இலங்கையிலிருந்து கிறீன் கார்ட்டுக்காக பெரும்பாலானோர் விண்ணப்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் கிறீன் கார்ட் திட்டத்திற்காக

இம்முறை இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கூடுதல் அளவில் கிறீன் கார்ட் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர் என கொழும்பு மாவட்ட தொழில்சார் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிலும் கிறீன் கார்ட் லொத்தர் சீட்டிலுப்பு மூலம் உலக அளவில் 55,000 பேருக்கு அமெரிக்காவில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கிறீன் கார்ட்டுக்காக விண்ணப்பம் செய்வதற்காக கால அவகாசம் கடந்த ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி முதல் இந்த மாதம் 9ம் திகதி வரையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction