free website hit counter

கந்தகாட்டில் கைதி உயிரிழப்பு - நான்கு படையினர் கைது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுத்தினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்ற கலவரத்தில் கொழும்பு - மோதரையைச் சேர்ந்த 36 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 726 பேர் தப்பியோடியிருந்தனர்.

இந்நிலையில், 667 கைதிகள் மீளவும் கைதுசெய்யப்பட்டதுடன், 59 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction