free website hit counter

ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சந்தேத்தின்பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியுதீன் சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் ஐந்தாம் சந்தேகநபராக பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

-வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction