free website hit counter

SLC குழு குறைந்தது 15 வருடங்கள் சிறையில் இருக்கும் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை வகிக்கும் வரை தனது பங்களிப்பை தொடர்ந்து செய்வேன்.
இடைக்கால குழுவை நியமிக்கும் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் தேவையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சில விடயங்களுக்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் தேவை, ஆனால் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“அமைச்சரவைக் கூட்டத்தின் போது கிரிக்கெட் அரசியலமைப்பின் எதிர்காலத் திருத்தங்கள் மற்றும் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களின் கருத்துக்களைப் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது” என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் விபரங்களை அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை வகிக்கும் வரை தனது பங்களிப்பை தொடர்ந்து செய்வேன் என தெரிவித்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி விரும்பினால் அவரை நீக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

“இவர்கள் பொதுப் பணத்தை அனுபவிக்கிறார்கள். ஜனாதிபதி, அட்டர்னி ஜெனரல் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் எனக்கு உதவினால், மொத்த SLC குழுவும் குறைந்தது 15 வருடங்கள் சிறையில் இருக்கும்” என்று அவர் கூறினார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க எந்தவொரு அரசியல் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாகவும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியுமென்றால், அவருக்கு அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

“அர்ஜுன ரணதுங்க கடந்த காலங்களில் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக SLC இடைக்கால குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன், முத்தையா முரளிதரன் கடந்த காலங்களில் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது அவருக்கு ஆதரவாக நின்றார், அவர் வெளியேறிய பிறகு அடுத்த தலைமுறையையும் கட்டியெழுப்பினார். அதுதான் தலைமைத்துவம். கிரிக்கெட்டை வழிநடத்தவும் கட்டமைக்கவும் அவரைப் போன்றவர் பொருத்தமானவர்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமித்ததையடுத்து, விளையாட்டு அமைச்சரினால் SLC இடைக்கால குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்திருக்கவில்லை என நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

நேற்றைய சந்திப்பின் போது, அமைச்சரவை அமைச்சர்கள் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction