நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஸ்ரீ லங்கா டெலிகொம், தாமரைக் கோபுரம், நார்த் சீ, திரிபோஷா நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.