free website hit counter

இலங்கையின் நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு? ஜனாதிபதி பதிலளித்தார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேக்களின் பங்கும் உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒப்புக்கொண்டார்.
“அவர்களின் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்தபோது, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் சரிந்தது. பொறுப்பேற்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பொறுப்பில் இருந்து நழுவியது,” என்று விளக்கினார்.

பலதரப்பினராலும் பொறுப்பற்ற செயல்கள் ஏராளமாக நடந்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, “அதில் ஒரு பகுதியை மாத்திரம் பார்க்காமல், அனைத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

தான் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதாக விமர்சகர்களின் கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, அந்த கூற்றுக்களை மறுத்து, “நான் ராஜபக்சக்களை பாதுகாக்கவில்லை. ராஜபக்ஷேக்களும் பொறுப்பு என்று கூறுகின்றேன். ஆனால் அதன் பிறகு பொறுப்பேற்க வேறு யாரும் இல்லை. விமர்சகர்கள் பொறுப்பில் இருந்து ஓடியவர்கள்." என்றார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, தானும் மகிந்த ராஜபக்சவும் எப்போதும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதுடன் பிறந்தநாளையும் கொண்டாடுவது பொதுவான நடைமுறை என தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளுக்கு நான் எப்போதும் வாழ்த்து தெரிவித்தேன். அவர் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இம்முறை திரு.நாமல் ராஜபக்ச தனது வீட்டிற்கு விருந்துக்கு வர முடியுமா என்று கேட்டதற்கு நான் ஆம் என்றேன். எந்த எம்.பி.யும் என்னை அழைத்தால், எனக்கு நேரம் கிடைத்தால், நான் பிறந்தநாள் விழாவிற்கு செல்வேன். சில சமயங்களில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலோ அல்லது அமைச்சரவையிலோ நாமும் கேக் வாங்கி அதை வெட்டுவோம். இது ஒரு பாரம்பரியம்.” என்று அவர் கூறினார்.

விமர்சகர்கள் கூறுவது போல் தாம் ராஜபக்சக்களுக்கு பினாமி அல்ல என்று கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, தற்போது ராஜபக்சக்களின் கட்சி பிளவுபட்டுள்ளதை வெளிப்படுத்தினார்.

“ஒரு பாதி சமகி ஜன பலவேகயாவுடனும், மற்ற பாதி என்னுடனும் வேலை செய்கின்றன. ஒட்டுமொத்த ராஜபக்ச கட்சியும் எனக்கு ஆதரவாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். சஜித் பிரேமதாசவுக்கு முழு சமகி ஜன பலவேகய ஆதரவளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். அனைத்து கட்சிகளும் பிளவுபட்டுள்ளன.'' என்றார்.

நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாகவும், இலங்கையின் அதிபராக நியமிக்கப்படுவதற்கான பெரும்பான்மையைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction