free website hit counter

இலங்கையில் 10000ஐ தொட்ட கொரோனா மரணங்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கு 10000ஐ கடந்துள்ளது.

நேற்றையதினம் (5) ஏற்பட்ட 189 மரணங்களையடுத்து மொத்தமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 10000 கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மரண எண்ணிக்கையான 189 என்பது நேற்றுமுந்தைய தினத்திற்குறியது). உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் அடங்குகின்றனர். அவர்களில் 154 பேர் 60 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்களாவர்.

இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 3,308 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,62,023 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 67,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction