free website hit counter

நபரொருவரை அடித்துக் கொன்ற 16 வயதுடைய மூன்று சிறுவர்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிபென்னையில் நபரொருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த குழுவினர் உயிரிழந்த நபரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதசாரிகளுக்கு ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிள்களை அஜாக்கிரதையாக ஓட்ட வேண்டாம் என எச்சரித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குழந்தையின் தந்தையான பாதிக்கப்பட்டவரை வாலிபர்கள் தாக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாடசாலை ஒன்றின் தரம் 11 மாணவர்கள் எனவும், அதில் உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் வேலைக்காக வெளிநாடு செல்வதற்காக காத்திருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction