free website hit counter

சுவிற்சர்லாந்தில் பெரு நிகழ்வுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் பெருநிகழ்வுகளில், நோயெதிர்ப்பு இல்லாத பங்கேற்பாளர்கள் அதிகமாக இருப்பதால், பெருந்தொற்றின் ஆபத்து அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிகழ்வுகளில், மக்கள் ஒரு மூடிய இடத்தில் நடைபெறும், நடனம், அல்லது பாடுதல் போன்ற நிகழ்வுகளில் குறைந்தளவிலான வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கூட கடுமையான தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுவிஸ் மத்திய கூட்டாட்சிப் பணிக்குழு குறிப்பிடுகிறது.

பெரிய நிகழ்வுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன, ஏனென்றால் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை பத்து நாட்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 18 முதல் 34 வயதுடையவர்களில் பலர் தற்போது டெல்டா மாறுபாட்டிலிருந்து நேர்மறையானவர்களாக உள்ளார்கள். இந்த வயதில் உள்ளவர்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 300 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

ஜேர்மனியில் வெள்ள நிவாரணத்திற்கு 400 மில்லியன் டாலர் அரசு ஒதுக்கீடு !

இது தவிர, சுவிற்சர்லாந்தில் 50 வயதிற்கு மேற்பட்ட நோயெதிர்ப்பு இல்லாதவர்களின் சதவீதம் இங்கிலாந்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்று பணிக்குழு மதிப்பிட்டுள்ளது. கடந்த சில வாரங்களைப் போலவே தொற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால், வரும் வாரங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் பணிக்குழு எதிர்வு கூறியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction