counter create hit சுவிற்சர்லாந்தில் இறுதி வடிவம் பெறுகிறது கோவிட் -19 பாஸ் !

சுவிற்சர்லாந்தில் இறுதி வடிவம் பெறுகிறது கோவிட் -19 பாஸ் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொற்று நோய்க்கான சான்றிதழ் வடிவம் உருவாக்குதலின் கடைசி கட்டங்களில் தற்போது தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜூன் 7ந்திகதி முதல் படிப்படியாக மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

தற்போது இச்சான்றிதழின் "பொருத்தமான அளவிலான தனியுரிமை பாதுகாப்பிற்கான பல்வேறு பாதுகாப்பு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று NCSC தெரிவித்துள்ளது. நிபுணர்களுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பு அறிவுள்ள பொது உறுப்பினர்களும் இந்த அமைப்பில் ஏதேனும் பலவீனமான இடங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நோக்கத்திற்காக, கோவிட் சான்றிதழின் மூலக் குறியீட்டை என்.சி.எஸ்.சி தற்போது பொதுவில் கிடைக்கச் செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க; சுவிற்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் வசிப்பவர்கள் இந்த வாரம் இத்தாலியில் பொருட் கொள்வனவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைக்கு அருகில் வசிக்கும் சுவிஸ் குடியிருப்பாளர்களைபொருட் கொள்வனவு செய்ய அனுமதிக்கும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் போலல்லாமல், இத்தாலி இன்னும் கடுமையான நுழைவு விதிகளைக் கொண்டுள்ளது.

இராவணன் வேடத்தில் சீமான் !

எவ்வாறாயினும், இத்தாலிய எல்லையின் 20 கிலோமீட்டருக்குள் வசிக்கும் டிசினோ குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக விலக்கு அளிக்கக் கோரி இத்தாலிய எல்லை நகராட்சியின் லாவெனா பொன்டே ட்ரெசா இத்தாலியின் சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் வரும் நான்கு நாள் வார இறுதியில் டிசினோவைச் சேர்ந்தவர்கள் இத்தாலியில் வர்த்தகக் கொள்வனவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இத்தாலிய அரசு சாதகமான பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலிக்குள் இந்தியா, இலங்கை, மற்றும் பங்களாதேஷ் பயணிகள் நுழைவுத் தடை நீட்டிப்பு !

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula