free website hit counter

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் - 81 சதவிகித வாக்குகள் பதிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவைடைந்தது. இந்த தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் உட்பட 259 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் 3 ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, திரிபுரா தேர்தலில் சுமார் 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு இறுதி விவரம் இன்றிரவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction