free website hit counter

இந்தியா - சீனா எல்லை பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 9,400 வீரர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா-சீன எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சீனாவை ஒட்டிய எல்லையை பாதுகாத்து வரும் இந்தோ - திபெத்தியன் எல்லை போலீஸ் படை (ITBP) பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், கூடுதலாக 9,400 வீரர்கள் இந்த பிரிவில் இணைவார்கள் என்றும், இந்தியா-சீனா எல்லையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 முகாம்களிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதை அடுத்து, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் படை சுமார் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்டதாக பலப்படுத்தப்பட்டது. தற்போது இவர்கள் 3,488 கி.மீ. தொலைவு கொண்ட எல்லையை பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction