free website hit counter

சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்ட சிறுவன் !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய்காந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பஞ்சாபி நடிகர் சோனு சூட். இதன்பின்னர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லன் நடிகராக நடித்து வருகிறார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்.

கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்திய மாணவர்களை தனது சொந்த செலவில் 7 முறை விமானத்தில் அழைத்து வந்தார். இதற்காக அவர் செலவிட்ட தொகை 1.60 லட்சம். அதன்பின்னர் ஏழை மக்கள் எங்கிருந்து உதவி கேட்டாலும் செய்து வருகிறார். இதனால் அவருடைய சொத்து பாதியாகக் கரைந்துவிட்டதாக அவருடைய மனைவி உறவினர்களிடம் வருந்தியதும் சமீபத்தில் செய்தியானது. மேலும் உதவி கேட்டு சோனு சூட்டின் மும்பை வீட்டின் முன்பாக குவிந்துவிடுகிறார்கள். அவர்களில் உண்மையாகவே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உடனடியாகச் செய்து வருகிறார்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனான் வெங்கடேஷ் என்பவரின் செயல் சோனு சூட்டை ஆச்சர்யத்தில் அதிர்ச்சியும் தள்ளியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுவன் வெங்கடேஷின் குடும்பம் வாழ்வாதாரம் இன்று கஷ்டப்பட்டு வந்துள்ளது. காரணம், அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ஆட்டோக்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வங்கிக் கடனில் வாங்கப்பட்ட ஆட்டோவுக்கான மாதாந்திர தவணை செலுத்த முடியாததால், தனியார் நிதி நிறுவனம் ஆட்டோவை பறிமுதல் செய்தது.

இதனால் தனது தந்தையின் நிலையைப் பார்த்த வெங்கடேஷ், நடிகர் சோனு சூட்டை நேரில் சந்தித்து உதவி கேட்க முடிவு செய்தார். அதன்படி தெலங்கானா மாநிலத்தில் இருந்து, காலணி ஏதும் அணிய வழியின்றி மும்பையில் உள்ள சோனு சூட்டின் வீட்டுக்கு நடந்தே சென்றுள்ளார் வெங்கடேஷ். தன் பயணத்தை கடந்த 1-ஆம் தேதி தொடங்கி இருக்கிறார். எட்டு நாட்களாக ரோடு வழியாக நடந்து சென்ற அவர், இரவு நேரத்தில் கோயிலில் தங்கி ஓய்வு எடுத்திருக்கிறார். பிறகு மும்பையில் சோனு சூட் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது ரசிகர் ஒருவர் 700 கி.மீ தூரம் நடந்து வந்ததை அறிந்த சோனு சூட், அவருடன் உணவருந்தி, இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர், அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியதுடன், அவர் தெலுங்கானா திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வு பற்றி தனது சமூக வலைதளத்தில் “Venkatesh, walked barefoot all the way from Hyd to Mumbai to meet me, despite me making efforts to arrange some sort of transportation for him. He is truly inspiring & has immensely humbled me Ps. I, however, don’t want to encourage anyone to take the trouble of doing this,” என்று தெரிவித்துள்ளார்.

-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction