free website hit counter

இயற்கை ஏன் சீற்றங் கொள்கிறது ..?

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதர்கள் அவர்களின் அறிவுக்கு அல்லது மனதிற்கு புலப்படாத பல விடயங்கள் இங்கு இருப்பதை உணர மறுக்கிறார்கள். இந்த பூமியும் சரி ,பிரபஞ்சமும் சரி எண்ணில் அடங்காத மர்மங்கள் அதிசயங்கள் நிறைந்தது.

இந்த பரந்து பட்ட வான் வெளியில் மனித அறிவிற்கு தெரிந்தது 1% அளவு கூட இல்லை. அவ்வளவு ஏன் இந்த பூமியில் கூட மனித அறிவு மனதிற்கு புலப்படாத பல்வேறு சக்தி செயல்கள் இயற்கையின் விளையாட்டுக்கள் மர்மங்கள் செயல்கள் எங்கும் நடைபெறுகின்றன. பல்கலைகழகங்களில் அதிகம் கற்ற மிகப்பெரும் விஞ்ஞானிகள் கூட இப்பூமியினை பற்றி அறிந்தது 10%கூட இருக்காது . சாதாரணமக்கள் பற்றி கேட்க வேண்டியது இல்லை. ஏன் இதை முதலில் கூறுகின்றேன் என்றால் இயற்கை தெய்வம் பூமி வெளி இவை அனைத்தையும் இயக்கும் சக்தி, நமது செயல்களை அதன் பிடியில் இயக்கத்தில் வைத்து உள்ளது.

- இயற்கையின் அமைதி -

நாம் சக மனிதர்கள் அல்லது உயிரினங்கள் அல்லது தாவரங்கள் மற்றும் இயற்கைக்கு எதிராக செய்யும் செயல்களின் எதிர் விளைவை நிச்சயம் திரும்ப இயற்கை சக்தி வெளிப்படுத்தும். “பாவமன்னிப்பு” எல்லாம் வழங்கி உங்களை மகிழ்ச்சி படுத்தாது. நமது அநியாயம் அல்லது நமது ஆணவம் அல்லது அதிகாரம் மூலம் பிறரை துன்பம் அடைய விடுவதற்கு முன் இதனை நினைவில் கொள்ள வேண்டும்.

இயற்கையின் சீற்றத்தினால் உருவான சூறாவளி திருப்பிக் கொடுத்த பரிசு

பிறரின் மனதினை ஆன்மாவை நம்மால் தொடக் கூட முடியாது நடுங்க செய்யும். ஒவ்வொரு தடவையும் நமது பாவத்தின் கணக்கு வரவு வைக்கப்பட்டு, பின் சரியான நேரத்தில் சமன் செய்யப்படும். நேரடியாகவோ அல்லது இயற்கையின் சீற்றம் மூலமோ இது நிகழும். இயற்கையின் சீற்றம் என்பது மனிதர்கள் மனநிலை துன்பம் எண்ணங்களின் ஆற்றல் உயிர்கள் மரங்களின் துன்பம் வலி போன்றவற்றை சமன் செய்யும் நிகழ்வுகள் தான்.

நன்றி : கஜன் சாம்பசிவம்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction