free website hit counter

சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் மூன்றாம் அலை எவ்வாறு ஏற்படும் ?

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் நேற்று புதன் கிழமை மட்டும், ஏறக்குறைய 300 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வார எண்ணிக்கையை விட கணிசமான அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் மூன்றாவது அலை எவ்வாறு தோன்றக்கூடும் என்பதற்கு, நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு காரணம் மக்கள் அறியாமைதான் காரணம் என சுவிஸ் அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் நாந்தர்மோட் கூறுகையில், "மூன்றாவது அலை, மக்களின் அகங்காரம் மற்றும் அறியாமையால் ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு உறுப்பினர் லோரென்ஸ் ஹெஸ் கூறுகையில் “சுவிற்சர்லாந்தால் மூன்றாவது அலையை வாங்க முடியாது.மருத்துவ நியாயம் இல்லையென்றால், தடுப்பூசியைத் தவிர்ப்பதற்கு உங்களுக்கு நல்ல காரணம் இல்லை ”, எனத் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் (HUG) மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகம் (UNIGE) ஆகியவற்றின் புதிய ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் தங்கள் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டது முதல் ஏழு தொடக்கம் ஒன்பது மாதங்கள் வரை நீடித்திருப்பதாகக் கூறினர்.

அவர்களில் 20.7 சதவிகித மக்கள் நாள்பட்ட சோர்வினாலும், 16.8 சத விகித மக்கள், பொதுவாக சுவை அல்லது வாசனை இழப்பும், மூச்சுத் திணறலில் 11.7 சதவிகிதமானோரும், 10 சதவீதமானோர் உடல்வலி மற்றும் தலைவலிப் பாதிப்புக்குளாகியுள்ளார்கள் எனக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் சர்வதேச ஆய்வுகளுடன் ஒப்பிடத்தக்க, ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டவை என அறியப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: