free website hit counter

சுவிற்சர்லாந்தில் இன்று முதல் இலவச கோவிட் ஸ்கிரீனிங் முடிவடைகிறது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் இன்று முதல், தடுப்பூசி போடப்படாதவர்கள், சோதனை செய்ய சுமார் 50 பிராங்குகளை செலுத்த வேண்டும். இதேவேளை தடுப்பூசி போடுபவர்களுக்கு 50 பிராங்குகளுக்கான போனஸ் வவுச்சர்களை ஊக்குவிப்பு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் அறியவருகிறது.

மத்திய கூட்டாட்சி அரசு தடுப்புசி போடுவதற்கான காலவரையறையை, அக்டோபர் 1ம் திகதி தொடங்கும் என்று அறிவித்தது, ஆனால் பின்னர் மக்களுக்கு தடுப்பூசி போட அதிக நேரம் கொடுப்பதற்காக காலக்கெடுவை 11 ம் திகதி வரை நீட்டித்தது.

இந்த இலவச சோதனை நீடித்திருந்தால், சுவிற்சர்லாந்தில் கோவிட் சான்றிதழ் தேவை காலாவதியாகும் திகதியான 2022 ஜனவரி 24, வரையில் மத்திய அரசுக்கு சுமார் 770 மில்லியன் பிராங்குகள் செலவாகும். ஆயினும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் சோதனைகள் இன்னும் இலவசமாகவே இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத சுற்றுலா பயணிகள் கோவிட் சான்றிதழ் மாற்றத்திற்கு பணம் செலுத்த வேண்டும். மேலும் இன்று முதல், EU /EFTA அல்லாத நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் மக்கள் (அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட? அவர்களின் சுகாதார பாஸ்களை சுவிஸ் சான்றிதழாக மாற்ற வேண்டும் மற்றும் இந்த சேவைக்காக 30 பிராங்குகளை செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்களின் QR குறியீடுகள் சுவிட்சர்லாந்தில் வேலை செய்யாது.

இந்த நடவடிக்கையால், சுவிஸ் சுற்றுலா அதிகாரிகள் மற்றும் ஸ்கை ரிசார்ட் ஆபரேட்டர்கள் ஐரோப்பிய அல்லாத சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து போகும் என கவலை கொண்டுள்ளனர். சுவிஸின் அண்டை நாடான பிரான்சுக்கும் சான்றிதழ் மாற்றம் தேவை என்றாலும், இந்த நடைமுறை அங்கு இலவசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட், தடுப்பூசி போடுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், எவருக்கும் 50 பிராங்க் வவுச்சரை அரசாங்கம் வழங்குவதற்கு ஆலோசிப்பதாகக் கூறினார். இந்த வவுச்சர்களின் சரியான தன்மை இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றாலும், “அவை உள்ளூர் வணிகங்களில் பயன்படுத்தப்படலாம் என்ற அமையலாம். ஆனால் இதற்கான விவரங்களை மாநில அரசுகள் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊக்கத்தொகைக்கு அரசாங்கம் 150 மில்லியன் பிராங்குகளை செலவிடும். குறிப்பாக ஒவ்வொரு வாரமும் 50 மில்லியன் பிராங்குகள் கோவிட் இலவச சோதனைக்கு செலவிடப்படும்வகையில் இது குறைவெனக் குறிப்பிடும்
பெர்செட்டின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்து ஐரோப்பாவில் மிகக் குறைவான தடுப்பூசி விகிதங்களைக் கொண்டிருப்பதால், அதிகமான மக்களை தடுப்பூசி பெற ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction