free website hit counter

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறப்பு - மாநில அரசு முடிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளைத் திறந்து வருகின்றன.

ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே மேல்நிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் 23ம் திகதி முதல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே போல, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: