பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பெங்களூருவில் உள்ள அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தபோது, தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
அதன் உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் அந்நகருக்கு வந்திருந்தார்.
பின்னர் X தளத்தில், தனது விமான அனுபவத்தின் படங்களைப் பகிர்ந்த அவர் அந்த அனுபவத்தை "நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது." என்று குறிப்பிட்டார். மேலும் இது நாட்டின் உள்நாட்டு திறன்களில் மேலும் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றார்.
பாதுகாப்புத் தயாரிப்புகளின் உள்நாட்டு உற்பத்திக்கு மோடி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தனது அரசாங்கம் இந்தியாவில் அவற்றின் உற்பத்தி மற்றும் அவற்றின் ஏற்றுமதியை எவ்வாறு உயர்த்தியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.