free website hit counter

எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் புதிய தேதி அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

அந்த வகையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே, அடுத்த வாரம் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்காவில் உள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படுள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தள்ளிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction