free website hit counter

சி. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் - பதவியேற்ற பிறகு விஜய் ஆற்றிய முழு உரை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், இன்று (10) தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இது அம்மாநிலத்தின் அரசியல் களத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) நிறுவனரான விஜய், சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றார்.

 

இந்தப் பதவியேற்பு விழாவில் பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதே நேரத்தில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண சென்னையில் பெருந்திரளான ஆதரவாளர்கள் திரண்டனர்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது;

 

”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான். வறுமை, பசி எனக்கும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன். உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி மாதிரி தான் நான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைப்பதால் தான் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள்.

 

உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை, ’நாங்கள் இருக்கிறோம்.. பார்த்துக்கலாம்’ என அன்பாக, உறவாக ஏத்துக்கொண்டீர்கள். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள், அவமானங்களை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் என் கூடவே நின்று இன்று ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கி உள்ளீர்கள்.

 

எது சாத்தியமோ அதுமட்டும்தான் நான் செய்வேன். அப்போ சாத்தியம் இல்லாத்தை செய்ய மாட்டியா? என நீங்கள் கேள்வி கேட்பது தெரிகிறது. இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதி எனக்கு உள்ளது.

 

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன். அதன் பின்னர் முன்னோக்கி செல்ல உள்ளேன்.

 

இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள். அதேபோல எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். போதைப்பொருளை ஒழிப்பேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தான்.

 

ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்தில் ஒரு பைசவும் தொட மாட்டேன். விஜய் தப்பு பன்ன மாட்டான். தப்பு பன்னவும் விடமாட்டான். என் கூட இருப்பர்களாக இருந்தாலும் சரி. நாம் ஜெயித்துவிட்டோம். ஒரு ஆட்டம் ஆடி பார்த்துவிடலாம் என நினைப்பர்வர்கள் இப்பவே சென்றுவிடுங்கள். இங்கு ஒரே பவர் செண்ட்டர்தான்.

 

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என அனைவரும் நமது அரசில் நல்லா இருப்போம். சிறுபாண்மை சகோதரர்களுக்காக நமது அரசு கூடவே இருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

 

விஜய்யின் குட்டி நண்பா, நன்பிகளுக்கு நன்றிகள். உங்களுக்காக அனைத்து நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான். முக்கியமாக தமிழக வெற்றிக்கழக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. இது ஒரு புதிய தொடக்கம். மீண்டும் மீண்டும் சந்திப்போம். வணக்கம். ”

 

இவ்வாறு அவர் பேசினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: