free website hit counter

இந்தியாவில் தொடரும் கொரோனா தொற்றுத் தொடர்பில் பிரதமர் ஆலோசனை !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை நாட்டின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலேயே உள்ளது.

அங்குள்ள சில பகுதிகளில் தொற்று அதிகரித்தும் உள்ளது. இத்தகைய பகுதிகளில், தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு கவனம் கொள்கிறது.

இது தொடர்பில், வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த ஆலோசனை மாநாட்டில், தொற்றை தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறியவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவதற்கான வழிகளை ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் இந்த ஆலோசனைக் கூட்டத்தினை நடத்துகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: