free website hit counter

தமிழகத்தில் நாளை திங்கட் கிழமை முதல் பேரூந்துப் போக்கு வரத்துக்கள் இயங்கும் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுக்கள் ஒரளவு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு அளவிலான பேருந்து சேவையும், பொதுப் போக்குவரத்தும் தொடங்கவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாகவும், 50 சதவீத இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியின்றி இந்தச் சேவைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction